இயக்குநர் பாரதிராஜா மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி

பாரதிராஜா மறைவு

திரையுலகின் பெரும் ஆளுமையாகவும், கிராமத்து வாழ்வியலைத் திரையில் கொண்டு வந்த முன்னோடியாகவும் திகழ்ந்த இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்மஸ்ரீ விருது பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தென் தமிழகத்தின் கிராமப்புறச் சூழலில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கித் திருப்பியவர் பாரதிராஜா என்றும், திரைத்துறையை மண் வாசனையால் நிரப்பியவர் அவர் என்றும் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் விழுமியங்கள்

தமிழ் சினிமாவை மண் சார்ந்த விழுமியங்களோடு உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றியதில் பாரதிராஜாவின் பங்கு அளப்பரியது என அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு என்பது திரைத்துறைக்கும், கலை ஆர்வலர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது தனித்துவமான குரல், சினிமா இருக்கும் வரை என்றும் நிலைத்து நிற்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தினருக்கு ஆறுதல்

இயக்குநர் பாரதிராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மறைந்த பாரதிராஜாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

#bharathiraja #eps #condolences #tamilCinema #சென்னை #எடப்பாடி பழனிசாமி #இரங்கல் #இயக்குநர் பாரதிராஜா #directorBharathiraja #passesAway

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *