சுட்டெரிக்கும் வெயில்: வட மாநிலங்களில் பள்ளி நேரங்கள் மாற்றம்

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கு நாள் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோடையால் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் பள்ளிகளுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

கடும் பகல் நேர வெப்பத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், பள்ளிகளை வழக்கத்தை விட சீக்கிரமாக (காலை 7:00 அல்லது 7:30 மணிக்கு) தொடங்கி, நண்பகல் 12:00 அல்லது 12:30 மணிக்கெல்லாம் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்கூட்டிய கோடை விடுமுறை

மேலும் பல மாநிலங்கள் முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளன. சத்தீஸ்கர் மாநிலம் 2 வாரங்களுக்கு முன்னதாகவே தனது கோடை விடுமுறையை தொடங்கி ஏப்ரல் 20 முதல் ஜூன் 15 வரை விடுமுறை அறிவித்துள்ளது. ஒடிசாவில் நாளைமுதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை தொடங்குகிறது.

இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், வெப்ப தாக்கத்தால் ஏற்படும் இடர்களைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களில் வெப்ப அலை மேலும் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு

குழந்தைகள் வெப்பத்தில் அதிகம் பாதிக்கப்படுவதால், இந்த நேர மாற்றங்கள் முக்கியமானவை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான நீர் மற்றும் நிழலான இடத்தை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளில் வெப்பத்தைச் சமாளிக்க குடிநீர் வசதிகள் மற்றும் நிழல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

#வெப்ப அலை #மாணவர்கள் #பள்ளி விடுமுறை #வட மாநிலங்கள் #கல்வி #heat #northernStates #schools #வெயில் #பள்ளிகள்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *