கோல்கட்டாவில் பிரதமர் மோடி படகு பயணம்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார். அவர் இயற்கை அழகை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். பிரதமர் இது குறித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரதமரின் உரை

இன்று காலை கோல்கட்டாவில், ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன்; இது அன்னை கங்கைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார். படகோட்டிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது; அவர்களின் கடின உழைப்பு போற்றத்தக்கது. காலை நடைப்பயிற்சி செய்பவர்களையும் சந்தித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்க வளர்ச்சி

ஹூக்ளியில், மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மாபெரும் மேற்கு வங்க மக்களின் செழிப்புக்காகவும் உழைப்போம் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஹூக்ளி நதிக்கரையில் உண்மையிலேயே ஒரு மிகச் சிறப்பான காலைப் பொழுது அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நதியின் சிறப்பு

இந்த மாபெரும் நதியைப் புகைப்படம் எடுக்க முயன்றேன். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டேன். ஒவ்வொரு மேற்கு வங்க மாநில மக்கள் மனதிலும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின், காலத்தால் அழியாத ஆன்மாவைத் தாங்கிச் செல்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

#பிரதமர் மோடி #கோல்கட்டா #ஹூக்ளி நதி #மேற்கு வங்கம் #படகு பயணம் #கோல்கட்டாவில் பிரதமர் மோடி: படகில் பயணம் செய்து மகிழ்ச்சி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *