திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலத்திலிருந்து போதைப்பொருளை கடத்தி வந்த இரு பெண்களை சிறுகனூர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 12 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை விவரம்
சிறுகனூர் காவல் ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான போலீஸார், கடந்த முன்தினம் நள்ளிரவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொணலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் இரு பெண்கள் நின்றுகொண்டிருந்தனர்.
உடனடியாக அவர்களை அணுகி விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பெரும் அளவிலான கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் வெளிப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்ட பெண்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தவமணி (66) மற்றும் ராம்ஜி நகர் மலையப்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி (55) ஆகிய இருவர் ஆந்திராவிலிருந்து போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விரிவான விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவர்களிடமிருந்து 24 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அவர்களுடன் இருந்த கைபேசியை பறிமுதல் செய்தனர். தற்போது அவர்கள் இருவரும் சிறுகனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.









