இசைஞானி இளையராஜாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்

இளையராஜா பிறந்தநாள்

தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் தனது பதிவில், “இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார். அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜ்யம் தொடரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடம்பாக்கத்தில் ரசிகர்களின் கொண்டாட்டம்

இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு அதிகாலை முதலே ரசிகர்கள் திரளாகக் குவிந்தனர். இசைஞானியைக் காண வந்த ரசிகர்கள், “நலம் வாழ எந்நாளும்.. என் வாழ்த்துகள்.. தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்” என்ற பாடலை ஒன்றிணைந்து பாடி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இளையராஜா தனது இசைப் பயணத்தில் பல மைல்கற்களை எட்டியுள்ளார். திரைப்பட இசையமைப்பாளர் மட்டுமின்றி, உலகத்தரம் வாய்ந்த சிம்பொனி இசையமைப்பிலும் தனது முத்திரையை பதித்து வரும் அவர், தமிழ் இசை உலகில் ஒரு காலத்தால் அழியாத அடையாளமாகத் திகழ்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

#ilaiyaraaja #mkstalin #tamilcinema #music #ilayaraja #mkStalin #இளையராஜா #முக ஸ்டாலின்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *