திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இந்த மறைவு செய்தி திரையுலகினரிடையிலும் அவரது ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸின் இரங்கல் செய்தி
தன்னுடைய பதிவில் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அளவற்ற அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது அன்னையின் மறைவு தான்” என்றும் அவர் தனது பதிவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என அனைவரின் மீதும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply