பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தனிப்பெரும்பான்மை பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இன்று பாரம்பரிய உடை அணிந்து தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த விஜய், தனது முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கடைபிடித்த தனித்துவமான உடை முறை, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவின் போது வழக்கமான அரசியல் மரபுகளைக் கடந்து, கோட்-சூட் அணிந்து பதவியேற்றது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியது.

பொறுப்பேற்ற பிறகு, தினந்தோறும் காலை 9 மணி அளவில் கோட்-சூட் அணிந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். முதலமைச்சரின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கி வரும் சூழலில், இன்று அவர் தனது உடை முறையில் மாற்றம் செய்துள்ளார்.

பாரம்பரிய உடையில் வருகை

இன்று காலை தனது முகாம் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற புதுமனை புது விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், அதன் பின்னர் பட்டு வேட்டி மற்றும் சட்டையை அணிந்து தலைமைச் செயலகத்திற்கு வந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் பாரம்பரிய உடையில் தோன்றியிருப்பது அதிகாரிகளிடையே மட்டுமின்றி பொதுமக்களிடமும் கவனத்தைப் பெற்றுள்ளது.

முதலமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையில் தலைமைச் செயலகத்திற்குள் நுழையும் புகைப்படங்களும், காணொளிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அரசு நிர்வாகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், இன்று தனது பாரம்பரிய தோற்றத்தில் அலுவலகப் பணிகளை முன்னெடுத்தார்.

#chiefMinisterVijay #tamilNaduSecretariat #tvk #traditionalAttire #vijay #விஜய் #தவெக #தலைமை செயலகம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *