மகாராஷ்டிராவில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்து: 8 இளைஞர்கள் பலி

மகாராஷ்டிரா கார் விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், அதில் பயணித்த எட்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலின்படி, ரத்னகிரியில் உள்ள ஹார்னாய் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்த இளைஞர்கள் குழுவினர், இன்று அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஸ்கார்பியோ ரக காரில் பயணித்தபோது, அதிகாலை 3 மணியளவில் அம்பேனாலி காட் பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது. மலைப்பாதையில் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், வாகனம் நிலைதடுமாறி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

உயிரிழந்தவர்கள் விவரம்

இந்த விபத்தில் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த அனல் பவார் (25), ஆதித்யா அசோக் (21), ரிதேஷ் ராஜேந்திரா (25), சுஹாஸ் ஜிதேந்திரா (20), அன்ஸ் சமீர் (18), ஆனந்தா சிங்னடே (21), நிகில் அபிமன்யு (25) மற்றும் சந்தீப் கட்கர் (35) ஆகிய எட்டு பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கை

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து வந்து, பள்ளத்தாக்கில் சிதறிக்கிடந்த உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மலைப்பாதையில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#maharashtra #raigad #accident #roadSafety #கார் விபத்து #மகாராஷ்டிரா #carAccident #picnic #பிகினிக்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *