சென்னை துறைமுகம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வாக்குவாதமும் மோதலும்
தேர்தல் பிரச்சாரங்களின் போது சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, சேகர் பாபு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், உடல் ரீதியாகவும் தாக்கியதாக சினோரா அசோக் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்குதலுக்கு பிறகு, தனக்குவும் தனது ஆதரவாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சினோரா அசோக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் அடிப்படையில் மற்றும் பெறப்பட்ட புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
நான்கு பிரிவுகளில் வழக்கு
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டங்களை விசாரித்த காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது நான்கு வெவ்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தேர்தல் களத்தில் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளின் தரப்பிலிருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் வரவில்லை.

Leave a Reply