நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அபார வெற்றி பெற்றார்.
வெற்றி விவரங்கள்
பெரம்பூர் தொகுதியில் விஜய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 454 வாக்குகள் பெற்று, 53 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதியில் 91 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்று, சுமார் 27 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ராஜினாமா குழப்பம்
இந்த நிலையில், வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை விஜய் ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. அவர் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பெரம்பூரில் தொடர வாய்ப்பு
பெரும்பாலும் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து, சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக விஜய் தொடர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறுதேர்தல் வாய்ப்பு
திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்தால், அங்கு மறுதேர்தல் நடைபெறும். அதில் லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply