வெற்றி சான்றிதழ் பெற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு விஜய் பயணம்

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 113 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. பெரம்பூர், திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு தவெக தலைவர் விஜய் செல்கிறார். மெஜாரிட்டிக்கு தேவையான 118 தொகுதிகளில் 113 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளது.

வெற்றி சான்றிதழ் பெற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு விஜய் செல்கிறார். வெற்றி சான்றிதழை பெற்றபின் அடையாறில் உள்ள பெற்றோரை விஜய் சந்திக்க உள்ளார்.

#தவெக #விஜய் #தமிழக சட்டசபை தேர்தல் #தேர்தல் முன்னிலை #லயோலா கல்லூரி #வெற்றி சான்றிதழ் #tnAssemblyElection #tvk #vijay #தமிழக சட்டச

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *