மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம், வரும் சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்டை விரலை உயர்த்தி சூப்பராக உள்ளது என்றார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கையான பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது. முன்னதாக, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் விமான நிலையத்திற்கு வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் குறித்து கேட்ட கேள்விகளுக்கு சுருக்கமாகவும், உற்சாகமாகவும் பதிலளித்தார்.

Leave a Reply