சென்னை; தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மாற்றத்திற்கு காரணம்
மஹாராஷ்டிரா மாநிலம், கிழக்கு விதர்பா முதல், தமிழகத்தின் குமரிக் கடல் வரை வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மழை வாய்ப்பு
இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெயில் தாக்கம் அதிகரிப்பு
உள் மாவட்டங்களில் ஏப்.24 முதல் நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம், இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply