Tag: மத்திய அமைச்சர் அட்வைஸ்

  • பாக்கெட்டில் வெங்காயம் வைத்தால் ஆபத்து இல்லை: மத்திய அமைச்சர் அட்வைஸ்

    பாக்கெட்டில் வெங்காயம் வைத்தால் ஆபத்து இல்லை: மத்திய அமைச்சர் அட்வைஸ்

    மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டு பேசினார். வெப்பத்தை சமாளிக்க பாரம்பரிய முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது.

    வெப்பத்தை சமாளிக்க பாரம்பரிய முறை

    சிந்தியா தனது உரையில், ‘நான் காரிலும் தங்கும் இடத்திலும் ஏசி வசதியை பயன்படுத்துவதில்லை. மே, ஜூன் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். மக்கள் ஏசியை பயன்படுத்தாமல் எப்படி சமாளிப்பது என்று கேட்கின்றனர். நான் சொல்வேன், இது சம்பல் மண்ணின் தோல். எனக்கு வெப்பம் ஒரு விஷயமல்ல’ என்று பெருமையாக கூறினார்.

    தொடர்ந்து, ‘பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. தீயசக்திகளும் நெருங்காது’ என வலியுறுத்தினார். மேலும், தனது பாக்கெட்டில் இருந்து வெங்காயத்தை எடுத்து மக்கள் முன் உயர்த்திக் காட்டினார்.

    நவீனத்துவம் vs பாரம்பரியம்

    ‘அனைவரும் நவீன மயமான செல்போன்களை சுமந்து செல்கிறீர்கள். ஆனால் தொலைதொடர்பு அமைச்சரான நானும் வெங்காயத்தை சுமக்கிறேன். ஆயுர்வேதம் முன்னேறிவரும் சூழலில் இந்த பாரம்பரிய முறையை மறக்கக்கூடாது’ என்று சிந்தியா தெரிவித்தார்.

    52 டிகிரி வெப்பத்துக்கும் ஆலோசனை

    ‘ஜூன் மாதம் 52 டிகிரி வெயில் கொளுத்தும்போது, உங்கள் தலையில் முண்டாசு கட்டிக்கொள்ளுங்கள். பாக்கெட்டில் வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள். கடவுள் பெயரை சொல்லி எடுத்துச் செல்லுங்கள்’ என ஆலோசனை வழங்கினார்.

    இந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலர் இதனை கிண்டலாகவும் சிலர் ஆதரவாகவும் விமர்சித்து வருகின்றனர். வெப்பத்தை சமாளிக்க அறிவியல் முறைகளை பின்பற்ற பரிந்துரைப்பவர்கள் இந்த ஆலோசனையை ஏற்கவில்லை.

    #மத்திய அமைச்சர் #ஜோதிராதித்ய சிந்தியா #வெங்காயம் #பாரம்பரியம் #வெப்பம் #மத்திய பிரதேசம் #பாக்கெட்டில் வெங்காயம் வைத்துக் கொண்டால் எந்த ஆபத்தும் நேராது #மத்திய அமைச்சர் அட்வைஸ்