Tag: தேர்தல் நடத்தை விதிகள்

  • தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் நோட்டீஸ்

    தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் நோட்டீஸ்

    புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக்கோரி காங்கிரஸ், தி.மு.க., உட்பட 73 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட தீர்மான நோட்டீஸ் ராஜ்யசபாவில் அளிக்கப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் மீறல் குற்றச்சாட்டு

    தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் முதற்கட்ட தேர்தலுக்கு முன் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனை வலியுறுத்தின. ஆனால் தேர்தல் கமிஷன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி ராஜ்யசபாவில் காங்., எம்.பி.,க்கள் 27 பேர், தி.மு.க., திரிணமுல் காங்., உட்பட 73 பேர் கையெழுத்திட்ட தீர்மானத்தை காங்., எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணமுல் காங்., எம்.பி., சாகரிகா கோஸ் ஆகியோர் ராஜ்யசபா பொதுச்செயலரிடம் சமர்ப்பித்தனர்.

    எதிர்க்கட்சிகளின் மசோதாவில் முக்கிய குற்றச்சாட்டுகள்

    எதிர்க்கட்சிகள் அளித்த இந்த தீர்மானத்தில், ‘பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து பல்வேறு எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டின் மீது இதுவரை எந்தவொரு விளக்கமோ அறிவிப்போ அறிவுறுத்தலோ அல்லது அதற்குரிய பதிலையோ தலைமை தேர்தல் கமிஷனர் வெளியிடவில்லை’ என, குறிப்பிட்டுள்ளது.

    முந்தைய முயற்சியும் நிராகரிப்பும்

    ஏற்கனவே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தாக்கல் செய்த மசோதாவை முறையே சபாநாயகர் ஓம் பிர்லா, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிராகரித்தனர். இந்த முறை புதிய நோட்டீஸ் வாயிலாக மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டம் என்ன?

    இந்த நோட்டீஸ் மீது ராஜ்யசபா தலைவர் முடிவு எடுப்பார். எதிர்க்கட்சிகள் இது குறித்து தீவிர விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கையும் இந்த விவகாரம் மூலம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

    #தலைமை தேர்தல் கமிஷனர் #ஞானேஷ் குமார் #ராஜ்யசபா #எதிர்க்கட்சிகள் #தேர்தல் நடத்தை விதிகள் #பிரதமர் மோடி #தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி. #க்கள் மீண்டும் நோட்டீஸ்

  • தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சி யான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, புதிய வரவான தமிழக வெற்றிக்கழகம் என 4 முனை போட்டி நிலவியது.

    இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவானது.

    தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு

    இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். பணம் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவை அடுத்து, தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழு திரும்பப் பெறப்பட்டன. அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    இதுவரை எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை என்றும் தமிழகத்தில் மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவம், போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    #தமிழக தேர்தல் #தேர்தல் நடத்தை விதிகள் #வாக்குப்பதிவு #தேர்தல் ஆணையம் #அரசியல் #தமிழ்நாடு #2026 சட்டமன்ற தேர்தல் #சட்டமன்ற தேர்தல் #தேர்தல் பறக்கும் படை #2026AssemblyElection