Tag: சிறப்பு வார்டு

  • திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலா பாதிப்பு கண்காணிப்பிற்காக தனி வார்டு அமைப்பு

    திருச்சி அரசு மருத்துவமனையில் எபோலா பாதிப்பு கண்காணிப்பிற்காக தனி வார்டு அமைப்பு

    ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் எபோலா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கையை விடுத்துள்ளன. இந்த சூழலில், இந்தியாவிற்குள் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து உள்வரும் பயணிகள் தீவிரமாகச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பயணிகளுக்குக் காய்ச்சல், தீவிர சோர்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காரணமில்லாத இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்பது நுணுக்கமாகக் கவனிக்கப்படுகிறது.

    திருச்சியில் சிறப்பு ஏற்பாடுகள்

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கோ அல்லது அங்குப் பயணித்துத் திரும்பியவர்களுக்கோ எபோலா பாதிப்பு அறிகுறித் தென்பட்டால், அவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் பிரத்யேக வார்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    முன்னதாகக் கொரோனா தொற்று காலத்தின்போது தனிமைப்படுத்தல் மையமாகச் செயல்பட்ட திருச்சி அரசு மருத்துவமனையின் பின்புறக் கட்டிடத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்காகத் தலா ஐந்து படுக்கைகள் வீதம் மொத்தம் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது.

    தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை

    பாதிப்புக்குள்ளான நோயாளிகளை 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்கெனத் தனியான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுvது 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் நிர்வாகக் குழுvது திட்டமிட்டுள்ளது.

    மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எபோலா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளைத் துரிதமாகக் கண்டறிந்து, மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க இந்தக் கண்காணிப்பு வார்டு முக்கியப் பங்காற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்புடைய செய்திகள்

    latest

    சென்னை அரசு மருத்துவமனை அருகே குழந்தையை கடத்திய பெண் கைது: 7 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

    latest

    ராமேஸ்வரம் – ஹூப்ளி இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

    latest

    மரக்காணத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    #health #trichy #medicalNews #governmentHospital #எபோலா வைரஸ் #சிகிச்சை #திருச்சி அரசு மருத்துவமனை #சிறப்பு வார்டு #ebolaVirus #treatment