Tag: Spain

  • உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணியில் ரியல் மாட்ரிட் வீரர்கள் இடம்பெறவில்லை

    உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணியில் ரியல் மாட்ரிட் வீரர்கள் இடம்பெறவில்லை

    அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆவலோடு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடர் அடுத்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    ஸ்பெயின் அணிப்பணி அறிவிப்பு

    இந்த உலகக் கோப்பை தொடரில் வலுவான போட்டியாளராகக் கருதப்படும் ஸ்பெயின் அணியின் வீரர்களை அதன் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் டி லா புனெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பொதுவாக ஸ்பெயின் தேசிய அணியில் அந்நாட்டின் முன்னணி கிளப் அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் வழக்கம் உள்ளது.

    ரியல் மாட்ரிட் வீரர்களுக்கு வாய்ப்பில்லை

    பயிற்சியாளர் அறிவித்த தற்போதைய அணியில், ரியல் மாட்ரிட் கிளப் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டீன் ஹஜ்சென், அல்வரோ கேரிராஸ் மற்றும் பிரான் கார்சியா ஆகிய மூவரும் அணியில் உறுதியாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பயிற்சியாளர் தனது திட்டமிடலில் இவர்களை சேர்க்கவில்லை.

    ஸ்பெயினின் தேசிய அணி தேர்வில் ரியல் மாட்ரிட் வீரர்கள் யாரும் இடம் பெறாதது இதுவே முதல்முறையாகும். இந்த முடிவு கால்பந்து வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்சிலோனா அணியின் வீரர்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ள நிலையில், ரியல் மாட்ரிட் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகளுக்கு வழிவகுத்துள்ளது.

    தொடர்புடைய செய்திகள்

    #fifaWorldCup #spainNationalTeam #realMadrid #footballNewsTamil #உலகக் கோப்பை #கால்பந்து #spain #கால்பந்து அணி

  • ஸ்பெயின் கண்காட்சியில் ஸ்லிங்ஷாட் ரைடு ரோப் அறுந்து விபத்து: 4 பேர் பலத்த காயம்

    ஸ்பெயின் கண்காட்சியில் ஸ்லிங்ஷாட் ரைடு ரோப் அறுந்து விபத்து: 4 பேர் பலத்த காயம்

    ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் உள்ள செவில் நகரில் நடைபெற்ற வார கால கண்காட்சியில் பயங்கர விபத்து ஏற்பட்டது. திரில்லிங்கான சவாரியான ‘ஸ்லிங்ஷாட் ரைடு’ இயங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சவாரியில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து நிகழ்ந்த விதம்

    கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த சவாரி இயங்கிக்கொண்டிருந்தபோது இரண்டு சிறுவர்கள் அதில் அமர்ந்து மகிழ்ந்தனர். மேலே சென்று சுழன்றுகொண்டிருந்தபோது இடதுபுறம் இருந்த ரோப் திடீரென அறுந்தது. இதனால் சிறுவர்கள் அமர்ந்திருந்த பெட்டி சுமார் தொண்ணூறு மீட்டர் உயரத்திலிருந்து வேகமாக தரையை நோக்கி பாய்ந்தது.

    கீழே வரும்போது பக்கவாட்டில் இருந்த கம்பம் மீது தாறுமாறாக மோதியது. இந்த சம்பவத்தில் பெட்டியில் இருந்த 2 குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், ஸ்லிங்ஷாட் பெட்டி விழுந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பொதுமக்கள் அதிர்ச்சி

    இந்த சம்பவம் நிகழும்போது அங்கிருந்த மக்கள் பதறி துடித்தனர். கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. காயமடைந்த நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதிகாரிகள் விசாரணை

    இந்த விபத்து தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். சவாரியில் பராமரிப்பு குறைபாடு இருந்ததா, பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கண்காட்சி நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    #ஸ்பெயின் #கண்காட்சி விபத்து #ஸ்லிங்ஷாட் #செவில் #சவாரி விபத்து #பாதுகாப்பு #கண்காட்சி #விபத்து #spain #fair