Tag: Medak

  • தெலுங்கானாவில் ராணுவ வீரரை மனைவியும் குடும்பத்தினரும் கொலை

    தெலுங்கானாவில் ராணுவ வீரரை மனைவியும் குடும்பத்தினரும் கொலை

    தெலுங்கானா மாநிலம் மேடக் நகர் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில், குடும்ப தகராறு காரணமாக ஒரு ராணுவ வீரர் அவரது மனைவி மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரகாண்டில் பணியில் இருந்த பொன்னம் குமார் கவுட் (49) என்ற ராணுவ வீரர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் தனது சொந்த ஊரான மேடக் நகருக்கு வந்திருந்தார். இந்நிலையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு அவரது மனைவியுடனும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் காரணமாக, அவரது மனைவி பத்மா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிகிறது.

    தாக்குதலுக்கான காரணம்

    மனைவி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, பொன்னம் குமார் கவுட் இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அவர்கள் அங்கு தங்கியிருந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் பத்மாவிற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த பத்மா, தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டிற்கு வந்த பத்மா, மற்ற பெண்களுடன் இருந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பத்மா, அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் இணைந்து பொன்னம் குமார் கவுட்டை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    காவல்துறை நடவடிக்கை

    இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பொன்னம் குமார் கவுட், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மனைவி பத்மா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ குடியிருப்பில் நடந்த இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

    #crimeNews #telangana #medak #police #தெலுங்கானா #கிரைம் செய்திகள் #உல்லாசம் #ராணுவ வீரர் #மனைவி #telengana