Tag: Madurai thirukalyanam

  • பச்சை பட்டு உடுத்தி வந்த மீனாட்சி.. இதுதான் பின்னணி

    பச்சை பட்டு உடுத்தி வந்த மீனாட்சி.. இதுதான் பின்னணி

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக ஒட்டு மொத்த மதுரையும் ஒரு வருடம் காத்திருக்கும் என்றே சொல்லலாம். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று ஏப்ரல் 28ஆம் தேதியும், அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் மே 1ஆம் தேதியும் நடைபெறுகிறது.

    திருக்கல்யாணம் மற்றும் பட்டு வண்ணங்களின் முக்கியத்துவம்

    இன்று திருக்கல்யாணத்தில் மீனாட்சி உடுத்தும் பட்டும், வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் உடுத்தும் பட்டும் சிறப்பு கவனம் பெறும். அந்த வகையில் இன்று திருக்கல்யாணத்தில் அன்னை மீனாட்சி பச்சை பட்டு உடுத்தி மணப்பெண்ணாக மேடைக்கு வந்து நின்றார். பொதுவாகவே மீனாட்சிக்கும் பச்சைக்கும் ஏற்கனவே பல தொடர்பு உண்டு. மீனாட்சி அம்மன் கோயிலில் பச்சை நிறத்தில் ஆன மரகத கல்லால் தான் மீனாட்சி சிலை செதுக்கப்பட்டிருக்கும். அதே போல் பச்சை புடவை, பச்சை கிளியை தான் கையில் வைத்திருப்பார்.

    பின்னணி: வரலாறு மற்றும் நம்பிக்கைகள்

    ஒரு காலத்தில் மதுரை மக்கள் வரட்சியால் துன்பப்பட்டதாகவும், அப்போது அம்மன் பச்சை நிறத்தில் தோன்றி வளம், செழிப்பை அடையாளப்படுத்தியதாக கூறப்படுகிறது. மீனாட்சி மற்றும் அழகர் ஆண்டுதோறும் அணியும் உடைக்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இந்த ஆண்டு மீனாட்சி பச்சை பட்டில் அருள் பாலித்தார். பச்சை வண்ணம், செழிப்பு வளம், பசுமையை குறிக்கிறது. மீனாட்சி அம்மன் பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும், பசுமையாக இருக்கும் என்று அர்த்தம்.

    பிற வண்ணங்களின் பொருள்

    அதே போல், சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும் என்று அர்த்தம்.

    திருக்கல்யாணத்தின் சிறப்பு

    இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தியிருப்பது விவசாயம் மற்றும் செழிப்புக்கு நல்ல அறிகுறியாக பக்தர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

    #மதுரை #சித்திரை திருவிழா #மீனாட்சி அம்மன் #திருக்கல்யாணம் #பச்சை பட்டு #மரபு #maduraiMeenakshiThirukalyanam #meenakshiThirukalyanam #maduraiThirukalyanam #greenDressMeenakshi