Tag: Kamal Haasan

  • 44 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டலில் ‘மூன்றாம் பிறை’ – மே 1 முதல் ஓடிடியில்

    44 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டலில் ‘மூன்றாம் பிறை’ – மே 1 முதல் ஓடிடியில்

    பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1982ஆம் ஆண்டு வெளியான படம் ‘மூன்றாம் பிறை’. தமிழ் சினிமாவின் க்ளாஸிக் படமாக இன்றுவரை கொண்டாடப்படும் இந்தப் படத்துக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. திரைப்பட மேதைகளில் ஒருவரான பாலு மகேந்திரா இப்படத்தை இயக்கியதோடு ஒளிப்பதிவும் செய்திருந்தார். இளையராஜா இசையமைத்த பாடல்கள் பலவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

    44 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டல் மறுபதிப்பு

    இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். மேலும் பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையும் வென்றார். இதனுடன் பல தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களையும் பெற்றது. மேலும் இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு வருடம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, அதன் மகத்தான வெற்றி மற்றும் நிலையான வரவேற்பை நிரூபித்தது. தலைமுறைகளை கடந்து கொண்டாடப்படும் இந்தப் படம், இன்றைய பல இயக்குநர்களை சினிமாவை நோக்கித் திருப்பியதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

    நேரடியாக ஓடிடியில் வெளியீடு

    தற்போது இந்தப் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகவுள்ளது. வழக்கமாக புதுப்பிக்கப்படும் பழைய படங்கள் திரையரங்கில் வெளியிடப்படும். ஆனால் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள ‘மூன்றாம் பிறை’ படத்தின் புதிய பதிப்பு நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில், நாளை (மே 1) வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் அடுத்த முறையினரும், பழைய ரசிகர்களும் இந்த அற்புதமான படைப்பை மீண்டும் ரசிக்கும் அரிய வாய்ப்பாக அமையும் என்கிறது தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி தரப்பு.

    தமிழ் சினிமாவில் மூன்றாம் பிறையின் முக்கியத்துவம்

    ‘மூன்றாம் பிறை’ தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. பாலு மகேந்திராவின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை, மற்றும் கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் நடிப்பு ஆகியவை இணைந்து இப்படத்தை காலம்கடந்த படைப்பாக மாற்றியது. படத்தின் கதை, ஒரு ஆசிரியருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டது.

    அடுத்த தலைமுறைக்கு ஒரு பரிசு

    ஓடிடியில் வெளியாவதன் மூலம், புதிய தலைமுறை ரசிகர்கள் இந்த க்ளாசிக் படத்தை அனுபவிக்க முடியும். சத்யஜோதி தயாரிப்பு நிறுவனம் இந்த டிஜிட்டல் மறுபதிப்பு மூலம் படத்தின் காட்சி மற்றும் ஒலி தரத்தை மேம்படுத்தியுள்ளது. இது பாலு மகேந்திராவின் பார்வைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உள்ளது.

    #மூன்றாம் பிறை #பாலு மகேந்திரா #கமல்ஹாசன் #ஸ்ரீதேவி #இளையராஜா #அமேசான் ப்ரைம் #baluMahendra #moondramPirai #kamal #sridevi

  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – கமல்ஹாசன் பதில்

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? – கமல்ஹாசன் பதில்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தன்னுடைய மகள் சுருதிஹாசனுடன் சென்னை ஆழ்வார்ப்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று ஒட்டுப் போட்டார். நீண்ட வரிசையில் மக்களோடு, மக்களாக நின்று வாக்கை செலுத்தினார்.

    கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பதில்

    பின்னர் வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘என்னுடைய ஜனநாயக கடமையை செய்துவிட்டு வந்துள்ளேன்’ என்றார். மேலும் அவரிடம், ‘மாற்றம் வருமா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கமல்ஹாசன், ‘மாற்றம் வந்து கொண்டே இருக்கும்’ என்றார். மேலும் நிருபர் ஆட்சி மாற்றமா? என்று அவரிடம் கேட்டார். அதற்கு, ‘ஆட்சி மாற்றம் இல்லை. உங்கள் வாழ்க்கை மாறும்’ என்று பதில் அளித்து புறப்பட்டு சென்றார்.

    #கமல்ஹாசன் #மக்கள் நீதி மய்யம் #தமிழக தேர்தல் #வாக்களிப்பு #சுருதிஹாசன் #வாக்குப்பதிவு #electionVoting #kamalHaasan