Tag: EnIniya PonNilave

  • பாடல் இசைக்கு மட்டுமே உரிமை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

    பாடல் இசைக்கு மட்டுமே உரிமை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலின் முழுமையான பதிப்புரிமைத் தன்மையை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    நீதிமன்றத்தின் தீர்ப்பு

    இந்த வழக்கு நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும் என்றும், முழு பாடலுக்கும் உரிமை கோருவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

    சட்ட விளக்கம்

    பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் இசைப் படைப்பு என்பது இசையை மட்டுமே குறிக்கும். இதில் பாடல் வரிகளோ அல்லது அந்தப் பாடலின் ஒட்டுமொத்த ஒலிப்பதிவு முறையோ அடங்காது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், இளையராஜா முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க முடியாது என கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

    இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையேயான பதிப்புரிமைப் போராட்டங்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்த வரும் சூழலில், இந்தத் தீர்ப்பு சட்ட ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    #இளையராஜா #நீதிமன்ற தீர்ப்பு #பதிப்புரிமைச் சட்டம் #‛என் இனிய பொன் நிலாவே என்ற முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது #இளையராஜாவின் மனு தள்ளுபடி #ilaiyaraaja #copyright #lyrics #soundRecording #eniniyaPonnilave