Tag: Emergency Act

  • அவசரநிலை பிரகடனம்: ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

    அவசரநிலை பிரகடனம்: ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

    1975-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம், நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில், எண்ணற்ற தேசபக்தர்களின் கனவுகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக இந்தியாவில், அந்த அவசரநிலை அறிவிப்பு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    முடக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்

    சுமார் 21 மாதங்கள் நீடித்த இந்த அவசரநிலைக் காலத்தால், ஜனநாயகத்தின் அடிப்படை நடைமுறைகள் முழுமையாக முடக்கப்பட்டதாக அவர் பதிவிருந்தும்ள்ளார். குறிப்பாக, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, திட்டமிடப்பட்ட தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், அரசியல் காரணங்களுக்காகப் பல முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என லட்சக்கணக்கான மக்கள் எவ்வித முறையான விசாரணையுமின்றி கைது செய்யப்பட்ட நிகழ்வுகளை அவர் நினைவு கூர்ந்தார்.

    ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான உறுதி

    அக்காலக்கட்டத்தில் இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயக விழுமியங்களையும் காக்க உறுதியாக நின்று போராடிய அனைத்து நபர்களுக்கும் இந்நாளில் தனது மரியாதையைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர் எல்.முருகன், ஜனநாயக சுதந்திரங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனி ஒருபோதும் நிகழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    தொடர்புடைய செய்திகள்

    #எல்.முருகன் #அவசரநிலை #ஜனநாயகம் #இந்திய அரசியல் #சென்னை #எல். முருகன் #l.Murugan​ #arrest #emergency #emergencyAct

  • நெருக்கடி நிலை போராட்ட நினைவுகள்: சிறை சென்ற பெண்களைப் போற்றினார் வானதி சீனிவாசன்

    நெருக்கடி நிலை போராட்ட நினைவுகள்: சிறை சென்ற பெண்களைப் போற்றினார் வானதி சீனிவாசன்

    இந்திய வரலாற்றில் 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த ‘நெருக்கடி நிலை’யால் நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த சூழலில், அதற்கு எதிராகத் தொடரப்பட்ட போராட்டங்களின் நினைவுகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பகிர்ந்துள்ளார்.

    சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டம்

    காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை, சுதந்திர இந்தியாவின் கருப்புப் பக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கமும், அன்றைய ஜனசங்கம் கட்சியும் தீவிரமாகப் போராடினார்கள். கைது நடவடிக்கைகள் மற்றும் சிறை கொடுமைகள் நடந்த போதிலும், போராட்டக்காரர்கள் தங்கள் உறுதியை தளரவிடவில்லை என்று வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    சிறை சென்ற பெண்களின் தியாகம்

    1977-ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் வானதி சீனிவாசன். அந்தப் புகைப்படத்தில் மோகனா, கஸ்தூரி, அமிர்தவள்ளி, சின்ன பரமேஸ்வரி, பாரதி, சின்ன கல்யாணி உள்ளிட்ட பல பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெருக்கடி நிலைக்கு எதிரான இந்த ‘இரண்டாவது சுதந்திரப் போரில்’ பங்கேற்ற இவர்களின் வயது 13 முதல் 35 வரை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமிர்தவள்ளி என்பவர் சென்னை அயனாவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது, வெறும் 13 வயதே ஆனார். மன்னிப்புக் கடிதம் எழுதினால் விடுவிப்பதாகக் காவல்துறை கூறியும் அதை மறுத்து, சென்னை மத்திய சிறையில் 90 நாட்கள் தங்கியிருந்த அவரது வைராக்கியத்தைப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழக அரசியலில் பாஜகவின் வளர்ச்சி

    இத்தகைய தியாகிகளின் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் தான் இன்று பாரதிய ஜனதா கட்சி வலுவாக இயங்கி வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பாஜகவின் வேர்கள் ஆழமாகப் படர்ந்துள்ளதாகவும், வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி மலருவது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    #politics #history #tamilNadu #bjp #நெருக்கடி நிலை #வானதி சீனிவாசன் #பாஜக #vanathiSrinivasan #emergencyAct #emergencyProtest