Tag: சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு மனு

  • அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க எதிர்ப்பு: சபாநாயகரிடம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மனு

    அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க எதிர்ப்பு: சபாநாயகரிடம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மனு

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சபாநாயகரின் முடிவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகரை நேரில் சந்தித்து முறையீடு செய்தனர்.

    தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்ள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் இபிஎஸ் தலைமையிலான அணியில் 22 உறுப்பினர்களும், வேலுமணி தலைமையிலான அணியில் 25 உறுப்பினர்களும் உள்ளனர்.

    ராஜினாமா செய்த உறுப்பினர்கள்

    வேலுமணி அணியில் இருந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயகுமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா ஆகிய மூவரும் தங்கள் பதவிகளுக்கான ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மூன்று உறுப்பினர்களும் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டனர்.

    சபாநாயகரிடம் முறையீடு

    இந்த நிகழ்வின் எதிரொலியாக, இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓஎஸ் மணியன் உள்ளிட்டோர் சபாநாயகரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த மூன்று உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்ற முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    மனு அளித்த உறுப்பினர்கள், கட்சி தாவல் புகார்களுக்கு ஆளான சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை சபாநாயகர் இவ்வாறு எளிதாக ஏற்றும் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அரசியல் காரணங்களுக்காக கட்சி மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படக் கூடாது என்றும் அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    தொடர்புடைய செய்திகள்

    #admk #tamilnadupolitics #speaker #tvk #அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிர்ப்பு #சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு மனு #eps #mla #prabhakar #aiadmk