தமிழ்நாட்டில் வெப்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய ஓஆர்எஸ் கரைசல் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓஆர்எஸ் கரைசலை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் ஹீட் ஸ்ட்ரோக் என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பின்னணி
ஹீட் ஸ்ட்ரோக்-ஆல் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.
வெப்ப அலை காரணமாக கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், தேவையான அளவு தண்ணீர் குடிக்குமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
