Tag: அரியானா

  • நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்.. மாத்திரைபோட்டு குஷியில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

    நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்.. மாத்திரைபோட்டு குஷியில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

    உல்லாசமாக இருக்க பெண்களுடன் அதிக நேரம் நீடித்து இருப்பதற்கு சில ஆண்கள் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்கிறார்கள். இதன்முலம் அதிக நேரம் உல்லாசத்தில் ஈடுபடுவதற்கும் மேலும் களைப்பு அடையாமல் இருப்பதற்கும் இந்த வகையான மாத்திரைகளை உபயோகபடுத்தப்படுகின்றன.

    ஆனால் தற்போது மருத்துவ ஆராய்ச்சி மூலம் இந்த வகையான மாத்திரைகள் டாக்டர்கள் பரிந்துரையின்றி பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஆசையை அடக்காத சிலர் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

    அந்தவகையில், அரியானாவில் பாலுணர்வை தூண்டும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால் ரோஹித் லால் என்ற 29 வயது இளைஞர் படுக்கையிலேயே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மரணத்தின் பின்னணி

    அரியானா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் ரோஹித் லால் (வயது 29). இவர் புதுடெல்லியில் உள்ள இந்திய தரக் கவுன்சிலிலில் பணிபுரிந்து வந்தார். புதுடெல்லியில் உள்ள குருகிராமின் செக்டர் பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து இருந்து வந்துள்ளார். சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமணம் ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன.

    இந்தநிலையில், வழக்கமாக அவரது நண்பர்கள் பணிக்கு செல்வதற்காக ரோஹித் லாலுக்கு செல்போனில் தொடர்பு கொண்டனர். நீண்ட நேரமாகியும் செல்போன் எடுக்காததால் அவர் வசிக்கும் வீட்டிற்கு சென்று கதவை திறக்க முயன்றனர். வீட்டின் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது லால் படுக்கையில் உயிரிழந்து கிடப்பதை கண்டனர். அவரது அருகில் பாலியல் உணர்வை தூண்டும் மாத்திரைகள் சிதறி கிடந்ததாக தெரிவித்தனர். இதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    விசாரணைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள்

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் லால் தனது வருங்கால மனைவியை தன்னை சந்தித்து உல்லாசமாக இருக்க அழைத்து இருந்ததாகவும் குஷியில் அதிக மாத்திரை உட்கொண்டதால் ஆனால் அவர் வருவதற்கு முன்பே புதுமாப்பிள்ளை இறந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

    மருத்துவத்துறை தரப்பில், “அவர் பாலுணர்வை தூண்டும் மாத்திரை உட்கொண்டதால் அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் பிரேத பரிசோதனை நடத்தி உடலை லால் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    விழிப்புணர்வு மற்றும் போதை மருந்துகளின் ஆபத்துகள்

    மருத்துவ நிபுணர்கள், “வயாகரா போன்ற மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்வது உயிருக்கு ஆபத்தானது. குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள், இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்” என்று கூறுகின்றனர். தற்போது இந்த சம்பவம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    சட்ட நடவடிக்கைகள்

    இந்த சம்பவம் குறித்து அரியானா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    #அரியானா #வயாகரா #மரணம் #போலீஸ் விசாரணை #மாரடைப்பு #உடலுறவு #புதுடெல்லி #புதுமாப்பிள்ளை