Tag: பிறந்தநாள் கொண்டாட்டம்

  • மதுரை முதியோர் இல்லத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை சோனா

    மதுரை முதியோர் இல்லத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை சோனா

    திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சோனா, தனது பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் சமூக சேவையுடன் கொண்டாடினார். இதற்காக சென்னை மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு அவர் சென்றிருந்தார்.

    அங்கு தங்கியிருந்த முதியோர்களைச் சந்தித்து அவர்களின் நலன் குறித்து விசாரித்த நடிகை சோனா, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். முதியவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்ற அவர், இந்த நிகழ்வை மனநிறைவுடன் நிறைவு செய்தார்.

    தொழில்நுட்ப ஆர்வமும் கலைப்பயணமும்

    திரைத்துறை நடிப்பைத் தாண்டி, திரைப்படத் தொழில்நுட்பங்களில் அதிக ஆர்வம் கொண்டவர் சோனா. அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவே அவர் சமீபத்தில் ‘பஜ்ராவோ மஸ்தானி’ என்ற இசை ஆல்பத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த ஆல்பத்தில் பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன் இணைந்து நடித்திருந்தார். V2 இசையமைப்பில், ஆசிஃப் கான் ஒளிப்பதிவில் உருவான இந்த ஆல்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    புதிய திரைப்படத் திட்டங்கள்

    ஏற்கனவே பல படங்களில் முன்னணி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் சோனா, தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய படத்தின் தொடக்கத்தையும், தனது பிறந்தநாளையும் முன்னிட்டு முதியோர்களைச் சந்தித்து ஆசி பெற்றது, தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாழ்த்தாகக் கருதுவதாக நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

    #சினிமா #சமூக சேவை #பிறந்தநாள் #நடிகை சோனா #பிறந்தநாள் கொண்டாட்டம் #முதியோர் இல்லம் #actressSona #birthdayCelebration

  • முகத்தில் கேக் பூசியதால் ஆத்திரம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 3 நண்பர்களை சுட்டுக் கொன்ற நபர்

    முகத்தில் கேக் பூசியதால் ஆத்திரம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 3 நண்பர்களை சுட்டுக் கொன்ற நபர்

    உத்தரப்பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தகராறு மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ளது.

    புலந்த்சாஹரில் குர்ஜா நகர் பகுதியில் நேற்று இரவு ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா ஜிம் ஒன்றில் வைத்து நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட நண்பர்கள், அமர்தீப் சைனி, மனீஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகிய மூவர் விளையாட்டாக அவரது முகத்தில் கேக் பூசியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜீது சைனிக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தகராறுக்கு பிறகு அங்கிருந்து சென்ற ஜீது சைனி மற்றும் அவரது கூட்டாளிகள், உரிமம் பெற்ற சுமார் ஏழு துப்பாக்கிகளுடன் மீண்டும் வந்து மூவரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    தகவலறிந்து வந்த காவல்துறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்து ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

    தலைமறைவாக உள்ள ஜீது சைனி மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது ஒரு திட்டமிட்ட கொலை என்று உயிரிழந்த அமர்தீப்பின் சகோதரன் சஞ்சய் சைனி குற்றம் சாட்டியுள்ளார்.

    #உத்தரப்பிரதேசம் #துப்பாக்கிச் சூடு #பிறந்தநாள் #கொலை #காவல்துறை #பிறந்தநாள் கொண்டாட்டம் #துப்பாக்கிச்சூடு #நண்பர்கள் #உத்தரப் பிரதேசம் #uttarPradesh