தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் திருமதி. மோகினி மணி இன்று காலமானார். இந்த மறைவுச் செய்தி திரையுலகினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்தின் தாயார் மறைவு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
எடப்பாடி பழனிசாமியின் இரங்கல் செய்தி
“திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய தாயாரின் மறைவால் மிகுந்த மனவேதனையில் இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


