Tag: சொத்து சரிபார்ப்பு

  • 13 ஆண்டுகளுக்குப் பின்னும் சச்சினின் தினசரி வருமானம் ரூ.10 கோடி

    13 ஆண்டுகளுக்குப் பின்னும் சச்சினின் தினசரி வருமானம் ரூ.10 கோடி

    பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், 13 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2013-ல் ஓய்வு பெற்றார். ஆனாலும் அவரது புகழ் இன்னும் மறையாமல் உள்ளது.

    சச்சினின் நிகர மதிப்பு

    டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர், அத்துடன் அதிக சர்வதேச ரன்கள் மற்றும் அதிக சதம் அடித்தவர் உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், இன்றும் உலகளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக டெண்டுல்கர் தொடர்கிறார். இவருடைய சொத்து மதிப்பு இன்றைய சூழலில் சுமார் ரூ. 1,415 – 1,470 கோடி. ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்களில் இவரே உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தற்போது பிரபல வீரராக இருக்கும் விராட் கோலியை விடவும் ஓய்வுபெற்ற சச்சினின் நிகர மதிப்பு அதிகம்.

    வருமானம் மற்றும் பிராண்ட் மதிப்பு

    சச்சினின் சொத்து கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக 2020-ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட ரூ.600 கோடி அதிகரித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற சச்சினினுக்கான மவுசு விளம்பர உலகில் சற்றும் குறையவில்லை. பிரபலமான Kroll Celebrity Brand Valuation மற்றும் Outlook Business (ஏப்ரல் 2024 & 2026) அறிக்கைகளின்படி, சச்சின் டெண்டுல்கர் விளம்பரப் படப்பிடிப்புகள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒரு நாளைக்கு ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை கட்டணமாகப் பெறுகிறார். ஒரு ஓய்வு பெற்ற வீரர் ஒருநாள் வருமானமாக இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது உலக அளவில் மிக அபூர்வம்.

    முதலீடுகள் மற்றும் சொத்துக்கள்

    தற்போது விளையாடும் முன்னணி இளம் வீரர்கள் கூட இந்த அளவு தொகையை ஒருநாள் ஊதியமாக பெறவில்லை. மிகச்சிறந்த முதலீட்டாளராகவும் சச்சின் மாறியிருக்கிறார். ‘Azad Engineering’ போன்ற நிறுவனங்களில் சச்சின் முதலீடு செய்திருந்தார். இதில் அந்நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்த பிறகு பெரும் லாபத்தைத் தந்தது. இது தவிர EdTech மற்றும் Clean Energy ஆகிய நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். ரியல் எஸ்டேட் முதலீடுகள் வேறு இருக்கிறது. மும்பையின் பாந்த்ரா மேற்கில் சச்சின் வசிக்கும் ‘பெர்ரி கிராஸ் ரோடு’ பங்களாவின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர லண்டன் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களிலும் அவருக்கு விலையுயர்ந்த சொத்துக்கள் உள்ளன. இதுவே ரூ.300 கோடியை தாண்டும் எனச் சொல்லப்படுகிறது.

    முடிவு

    சுருக்கமாகச் சொன்னால் கிரிக்கெட்டில் மட்டுமல்ல வருமானம் ஈட்டுவதில் மற்ற வீரர்களை விட ஜாம்பவானாக இருக்கிறார் என்று மறுக்கமுடியாத உண்மை.

    #சச்சின் டெண்டுல்கர் #கிரிக்கெட் #வருமானம் #விளம்பரம் #சொத்து #இந்தியா #சச்சின் #இந்திய கிரிக்கெட் #சச்சின் வருமானம் #சச்சின் முதலீடு

  • தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சரிபார்ப்பு; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்

    தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சரிபார்ப்பு; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்

    சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்பாளர்களின் சொத்து விபரங்களை சரிபார்க்கும் நடைமுறை துவக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    சொத்து விபர முரண்பாடு வழக்கு

    சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள சொத்து விபரங்களுக்கும், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து விபரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக ஆர்.குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில், வருமான வரித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வருமான வரித்துறை விளக்கம்

    மனுவில், வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாவது: “லோக்சபா, சட்டசபை தேர்தல்களின்போது, வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விபரங்கள் குறித்து சரிபார்க்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நேரடி வரிகள் வாரியம் 2019ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பின், வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விபரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை துவக்க வேண்டும்; 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் என நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

    உதயநிதி சொத்து விவரம்

    உதயநிதியின் சொத்து விபரங்களை பொறுத்தவரை, விரிவான ஆய்வு செய்யாமல் 2021, 2026ம் ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்புகளை ஒப்பீட்டு பார்க்க முடியாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. உதயநிதியின் நிதி குறித்த ஆவணங்கள் தற்போது வருமான வரித்துறை வசம் இல்லை. தற்போதைய நிலையில் எந்த இறுதியான முடிவுக்கும் வர முடியாது என்பதால், ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வருமான வரித்துறை கோரியுள்ளது.

    இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    #தேர்தல் #சொத்து சரிபார்ப்பு #வருமான வரித்துறை #உதயநிதி #சென்னை உயர் நீதிமன்றம் #தமிழக அரசியல் #தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சரிபார்ப்பு தொடங்கும் #ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்