Tag: சென்னை ஐசிஎப்

  • 2025-26ல் 7,914 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு – ரெயில்வே தகவல்

    2025-26ல் 7,914 ரெயில் பெட்டிகள் தயாரிப்பு – ரெயில்வே தகவல்

    இந்தியாவில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு புதிய மாற்றங்களை ரெயில்வே வாரியம் கொண்டு வருகிறது. குறிப்பாக, பழைய ரெயில் பெட்டிகளுக்கு பதிலாக, நவீன மற்றும் பாதுகாப்பான எல்.எச்.பி. பெட்டிகள் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலை, பஞ்சாப் கபூர்த்தலாவில் உள்ள ஆர்.சி.எப். தொழிற்சாலை, உத்தரபிரதேசத்தில் உள்ள எம்.சி.எப். தொழிற்சாலை ஆகிய 3 ரெயில் பெட்டி தொழிற்சாலைகள் உள்ளது.

    உற்பத்தி அதிகரிப்பு விவரங்கள்

    இங்கு எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில், மின்சார ரெயில் உள்பட அனைத்து வகை ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரெயில் பெட்டிகள் உற்பத்தி செய்யும் பணி ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, 2025-26-ம் நிதியாண்டில் 7,914 ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது கடந்த (2024-25) நிதியாண்டில் தயாரிக்கப்பட்ட 7,134 ரெயில் பெட்டிகளைவிட 11 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரெயில்வே உள்கட்டமைப்பை நவீனமாக்குவதில் இந்திய ரெயில்வே தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    பின்னணி ஒப்பீடு

    2004-2014 இடையே இந்திய ரெயில்வே ஆண்டுக்கு சராசரியாக 3,300-க்கும் குறைவான பெட்டிகளையே உற்பத்தி செய்தது. தற்போது மேம்பட்ட இணைப்பு மூலம் உற்பத்தி வெகுவாக அதிகரித்திருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தின் பங்கு

    சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலை நாட்டின் முக்கிய ரெயில் பெட்டி உற்பத்தி மையமாகும். இங்கு புதிய எல்.எச்.பி. பெட்டிகள் மற்றும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இது தமிழக பொருளாதாரத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.

    எதிர்கால திட்டங்கள்

    வரும் ஆண்டுகளில் உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. புதிய பெட்டிகள் மூலம் பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    #இந்திய ரெயில்வே #ரெயில் பெட்டிகள் #உற்பத்தி #ஐசிஎப் #தமிழகம் #நவீனமயமாக்கல் #தெற்கு ரெயில்வே #ரெயிவே வாரியம் #southernRailway #southernRailways

  • சென்னையில் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் தொடக்கம்

    சென்னையில் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் தொடக்கம்

    சென்னையில் 2-வது ஏசி மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் இயக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ஏசி மின்சார ரயில் கடந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டது.

    இந்த ரயில் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ஆகிய இரு மார்க்கங்களில் “பீக் ஹவர்சில்” கூடுதல் ஏசி மின்சார ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பயணிகள் கோரிக்கை மற்றும் திட்டமிடல்

    அதன்பேரில், கூடுதல் மின்சார ரயில் இயக்க ரெயில்வே வாரியத்துக்கு தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்திருந்தது. ரெயில்வே வாரியமும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு ஏசி மின்சார ரயில் தயாரித்து வழங்க, ஐ.சி.எப் நிர்வாகத்திடம் கேட்டிருந்தது. இதையடுத்து, 2-வது ஏசி மின்சார ரயில் தயாரிப்பு பணி சென்னை ஐசிஎப் ஆலையில் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது.

    இப்பணி 2 மாதம் முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த ஏசி மின்சார ரயிலை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில், தற்போது அன்னனூர் ரெயில்வே யார்டில் நிறுத்தி, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கியும் இந்த ரயில் சோதனை நடத்தப்பட உள்ளது.

    சென்னை ரெயில்வே அதிகாரிகள் தகவல்

    இதுகுறித்து, சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி சுமார் 4 லட்சம் பேர் பயணிக்கின்றனர். தினசரி காலை, மாலையில் “பீக் ஹவர்சில்” மின்சார ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    கூடுதல் மின்சார ரயில்கள் மற்றும் ஏசி மின்சார ரயில் இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, இந்த மார்க்கத்தில் ஏசி மின்சார ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதுபோல, செங்கல்பட்டு – கடற்கரை தடத்திலும் மேலும் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    புதிய ரயிலின் சிறப்பம்சங்கள்

    12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். எனவே, எந்த மார்க்கத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்து, ஏசி மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பீக் அவர்ஸ் நேரங்களில் பயணிகள் நெரிசலை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதிர்கால திட்டங்கள்

    தெற்கு ரயில்வே, மேலும் பல ஏசி மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை நகரின் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் செங்கல்பட்டு-கடற்கரை பாதையில் மூன்றாவது ஏசி மின்சார ரயிலும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

    #சென்னை ரயில் சேவை #ஏசி மின்சார ரயில் #ரெயில்வே #சென்னை ஐசிஎப் #புறநகர் ரயில் #சென்​னை​ #மின்​சார ரெயில் #ஏ.சி. மின்​சார ரெயில் #தெற்கு ரெயில்வே #chennai