தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நித ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்த அவர், அங்கிருக்கும் முக்கிய தேசியத் தலைவர்களை சந்தித்து உரையாடினார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாகக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முக்கிய திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதலமைச்சர் சந்தித்து உரையாடினார்.
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான நித ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதே இந்த பயணத்தின் முதன்மை நோக்கமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு பாரத் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டமிடல் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அரசியல் வட்டாரத் தகவல்களின்படி, தனது பயணத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவர், நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயாராகி வருகிறார்.
