தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி இயற்கை எய்திய சம்பவம் திரையுலகினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயரமான நிகழ்வு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் அஜித் குமார் அவர்களின் தாயார் மறைந்த செய்தி தனக்கு மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தாயை இழந்து வாடும் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் நயினார் நாகேந்திரன் பதிவு செய்துள்ளார். மறைந்த மோகினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
