Tag: இணையம்

  • இணையத்தில் 50% உள்ளடக்கம் AI உருவாக்கியது – அதிர்ச்சி தகவல்

    இணையத்தில் 50% உள்ளடக்கம் AI உருவாக்கியது – அதிர்ச்சி தகவல்

    இணையத்தில் நாம் பார்க்கும், படிக்கும் உள்ளடங்களில் (Content) 50% க்கும் மேல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

    பின்னணி

    2022 – 2026 க்கு இடைப்பட்ட வெறும் நான்கே ஆண்டுகளில், பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று இணையத்தின் 50% க்கும் மேல் செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்துள்ளது என அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘AI Index Report 2026’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முக்கிய கண்டுபிடிப்புகள்

    அறிக்கையின்படி, இணையத்தில் புதிதாக உருவாக்கப்படும் உள்ளடக்கங்களில் 51.72% செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படுபவை. மனிதர்களின் பங்களிப்பு 48.28% ஆகக் குறைந்துள்ளது.

    சமூக ஊடகப் பதிவுகள், மின்னஞ்சல்கள், வாடிக்கையாளர் சேவை, பக்கங்களில் டிராபிக்-ஐ அதிகரிக்கும் SEO சார்ந்த கட்டுரைகள் போன்றவை இந்த உள்ளடக்கங்களில் அடங்கும்.

    AI பயன்பாட்டின் நன்மைகள்

    ஒரு மனிதன் பல மணிநேரம் எடுத்துக்கொள்ளும் வேலையை ஏஐ சில நொடிகளில் முடித்துவிடுகிறது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வலைப்பதிவுகளை உருவாக்க முடிகிறது.

    மேலும் ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவது நிறுவனங்களுக்குப் பொருளாதார ரீதியாக லாபகரமாக உள்ளது. எனவே ஏஐ பயன்பாடு இணையத்தில் அதிகரித்து வருகிறது.

    எதிர்கால கவலைகள்

    வரும் காலங்களில் இணையத்தில் நாம் பார்க்கும், படிக்கும் உள்ளடக்கங்கள் முழுக்க முழுக்க ஏஐ எழுதிய மற்றும் உருவாக்கியவையாக மட்டுமே இருக்கும் என்ற கவலையும் பலரிடையே நிலவுகிறது.

    #செயற்கை நுண்ணறிவு #ai #இணையம் #டான்போர்ட் பல்கலைக்கழகம் #AI இண்டெக்ஸ் ரிப்போர்ட் #தொழில்நுட்பம் #ஏஐ தொழில்நுட்பம் #aiTechnology #artificialIntelligence