மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடாத்திய முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் இன்று நடைபெற்றது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 933 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இத்தேர்வில், சுமார் 8,19,372 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.
வினாத்தாளின் தன்மை மற்றும் விநியோகம்
இன்றைய தேர்வு பொது அறிவு மற்றும் சிசாட் (CSAT) எனப்படும் குடிமைப்பணி தகுதித் தேர்வு என இரு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. காலை session-இல் நடைபெற்ற பொது அறிவுத் தேர்வில் பொருளாதாரம், அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், புவியியல், வரலாறு மற்றும் கலாசாரம் ஆகிய தலைப்புகளில் வினாக்கள் இடம்பெற்றிருந்தன.
தேர்வில் பங்கேற்றவர்களின் கருத்துப்படி, 100 வினாக்களில் பொருளாதாரப் பகுதியில் மட்டும் 19 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இது மற்ற தலைப்புகளை விட அதிகமாக இருந்ததாலும், வினாக்களின் ஆழமான தன்மையாலும் இப்பகுதி மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வர்களின் எதிர்வினை
காலை நேரத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் சவாலாக இருந்ததாகக் குறிப்பிட்ட தேர்வர்கள், மாலை நேரத்தில் நடைபெற்ற சிசாட் தேர்வு ஒப்பீட்டளவில் எளிதாக இருந்ததாகக் கூறியுள்ளனர். குறிப்பாக, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்த கேள்விகளில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருந்ததாகப் பல விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிப்படைத்தன்மை மற்றும் விடைக்குறிப்புகள்
தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு முதல் முறையாக தேர்வு முடிந்த உடனேயே அதிகாரப்பூர்வ விடைக்குறிப்புகளை வெளியிட யுபிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய விடைகளின் சரியான தன்மையை விரைவாகக் கண்டறிந்து, தங்கள் செயல்திறனை மதிப்பிட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply