ஆறு வார நடவடிக்கையில் பெரும் இழப்பு
ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆறு வார கால போர் நடவடிக்கைகளின் போது, அந்நாட்டு ராணுவம் 42 விமானங்களை இழந்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் போது ஈரானிய ராணுவத்தின் தாக்குதலில் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வழங்கிய அதிகாரப்பூர்வ தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த விரிவான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போர்க்களத்தில் அமெரிக்க விமானப் படை சந்தித்த பாதிப்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட விமானங்களின் விவரம்
அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, அமெரிக்கா இழந்த அல்லது பெரும் சேதமடைந்த விமானங்களின் பட்டியலில் அதிநவீன போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 4 எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், ஒரு எப்-35ஏ லைட்னிங்-2 போர் விமானம் மற்றும் ஒரு ஏ-10 தண்டர்போல்ட் தாக்குதல் விமானம் ஆகியவை சேதமடைந்துள்ளன.
தாக்குதல் விமானங்கள் மட்டுமின்றி, ஆதரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்களும் பாதிப்படைந்துள்ளன. இதில் 7 கே.சி-135 ஸ்ட்ராடோடேங்கர் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ஒரு இ-3 சென்ட்ரி கண்காணிப்பு விமானம், 2 எம்.சி-130ஜெ கமாண்டோ சிறப்பு நடவடிக்கை விமானங்கள் மற்றும் ஒரு எச்.எச்-60டபிள்யூ ஜாலி கிரீன் ஹெலிகாப்டர் ஆகியவை அடங்கும்.
டிரோன் இழப்புகள் அதிகரிப்பு
இந்த மோதலில் அமெரிக்கா அதிக அளவில் இழந்தது ஆளில்லா விமானங்களையே ஆகும். அறிக்கையின்படி, 24 எம்.க்யூ-9 ரீப்பர் டிரோன்கள் மற்றும் ஒரு எம்.க்யூ-4சி டிரைட்டன் டிரோன் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் இழந்துள்ளது. இந்த இழப்புகள் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை வெளிப்படுத்துவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply