முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்; எதிர்க்கட்சியாக தொடர்வோம்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் படுதோல்வி அடைந்த நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சியாக தொடர்வோம்

இதற்கிடையே, சமூக வலைதளத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.

இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி திமுக கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு சதவீதம் வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.

புதிய பயணம்

ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். இனம், மொழி, நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

#ஸ்டாலின் #திமுக #தேர்தல் #தமிழகம் #ராஜினாமா #எதிர்க்கட்சி #முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின் #எதிர்க்கட்சியாக அரசியலை தொடர்வோம் என பதிவு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *