ஓட்டப்பிடாரம்: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்னிலை

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஓட்டப்பிடாரம் தொகுதி போட்டி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்பட 8 கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 10 மணி நிலவரப்படி 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 4,520 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மதன் ராஜா 4,269 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ராமஜெயம் 2.814 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சுந்தரராஜ் 2,793 வாக்குகள் பெற்று 4வது இடத்திலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அனுசியா 1,061 வாக்குகள் பெற்று 5வது இடத்திலும் உள்ளனர்.

#ஓட்டப்பிடாரம் #தேர்தல் #தமிழக சட்டசபை #வாக்கு எண்ணிக்கை #கிருஷ்ணசாமி #தூத்துக்குடி #தமிழக சட்டசபை தேர்தல் #புதிய தமிழகம் கட்சி #முன்னிலை #tamilNaduAssemblyElections

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *