திருப்பதி ஏழுமலையானுக்கு 753 கிராம் தங்க ஆபரணங்கள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஒருநாள் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.3 முதல் 4 கோடி வரை பக்தர்கள் வழங்குவர்.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பக்தர் எம். மகாதேவம்மா என்பவர் திருப்பதி ஏழுமலையானுக்கு 753 கிராம் எடையில், ரூ.94 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 7 தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினார்.

கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் அந்தத் தங்க ஆபரணங்களை கோவில் செயல் அலுவலர் முத்தாடா. ரவிச்சந்திரா, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

#திருப்பதி #ஏழுமலையான் #தங்க ஆபரணங்கள் #காணிக்கை #ttd #பெங்களூர் பக்தர் #tirupati #goldOrnaments

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *