சீன எண்ணெய் ஆலைகள் மீது அமெரிக்க தடை

ஈரானை பொருளாதார ரீதியில் முடக்கி, அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க வைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஈரானின் முக்கிய வருவாய் ஆதாரமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்படுகிறது. இதில் ஈரானை துறைமுகங்களை முடக்கும் விதமாக ஹோர்முஸ் ஜல சந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள்

இந்த நிலையில் ஈரான் எண்ணெயை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு உள்ள, சீனாவைச் சேர்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, 40 கப்பல் நிறுவனங்கள் மற்றும் டேங்கர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள டாலியன் துறைமுக நகரில் உள்ள ஹெங்லி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் ஆலையில், 2023-ம் ஆண்டு முதல் ஈரான் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

பொருளாதார தாக்கம்

அதன் மூலம் ஈரான் ராணுவத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் வருவாயை ஈட்டித் தந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. ஹெங்லி பெட்ரோகெமிக்கல் ஆலை, ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது ஆகும். இதுதொடர்பாக அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்காட் பெசென்ட் கூறும்போது, “ஈரான் தனது எண்ணெயை உலகச் சந்தைகளுக்குக் கொண்டு செல்ல நம்பியிருக்கும் கப்பல்கள், இடைத்தரகர்கள் மற்றும் வாங்குபவர்களின் வலைய மைப்பை நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஈரான், ரஷிய எண்ணெய் மீதான விலக்குகள் புதுப்பிக்கப்படாது. அவர்கள் உற்பத்தியை நிறுத்த வேண்டியிருக்கும்” என்றார்.

மேற்காசிய பதட்டங்கள்

இந்த தடை நடவடிக்கை மேற்காசிய பிராந்தியத்தில் பதட்டங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்க அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சீனா-ஈரான் வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சீனா இதுவரை அமெரிக்க தடைகளை புறக்கணித்து ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

#சீனா #அமெரிக்கா #ஈரான் #எண்ணெய் ஏற்றுமதி #பொருளாதார தடை #மேற்காசியா #iranWar #ஈரான் போர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *