தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அவர் ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார். படகோட்டியை கட்டியணைத்து ரூ.1000 கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஹூக்ளி பயணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவை பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
ஹூக்ளி நதி பயணம்
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “இன்று காலை கொல்கட்டாவில் ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன். இது அன்னை கங்கைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.”
படகோட்டிகளை சந்தித்த அனுபவம்
பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “படகோட்டிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் கடின உழைப்பு போற்றத்தக்கது. காலை நடைப்பயிற்சி செய்பவர்களையும் சந்தித்தேன். ஹூக்ளி நதிக்கரையில் உண்மையிலேயே ஒரு மிகச் சிறப்பான காலைப் பொழுது அமைந்தது” என்று தெரிவித்தார்.
கங்கையின் மகிமை
“இந்த மாபெரும் நதியைப் புகைப்படம் எடுக்க முயன்றேன். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டேன். ஒவ்வொரு மேற்குவங்க மாநில மக்கள் மனதிலும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின், காலத்தால் அழியாத ஆன்மாவைத் தாங்கிச் செல்கிறது” என பிரதமர் மோடி தனது பதிவில் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசார பின்னணி
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, மாநிலம் முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். கொல்கத்தாவில் அவர் மேற்கொண்ட இந்த ஹூக்ளி நதி பயணம், மக்களுடனான அவரது நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சமூக ஊடக வரவேற்பு
இந்த புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. பிரதமர் மோடியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். “Special moments on the Hooghly… an unforgettable Kolkata morning” என பதிவிட்டுள்ள பிரதமர், தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் மக்களுடன் செலவிடும் நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply