தமிழக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி 11 மணி நேரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.”

“84.69 சதவீதம் என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

“ஒரு வாக்குதானே” என எண்ணாமல், “ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது” என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்!” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை

தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தேறியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மே 4 அன்று முடிவு

மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த உயர் வாக்குப்பதிவு வரும் ஆட்சியின் திசையை தீர்மானிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

#தமிழக தேர்தல் #மு.க.ஸ்டாலின் #சட்டசபை தேர்தல் #வாக்குப்பதிவு #தேர்தல் முடிவுகள் #ஜனநாயகம் #சட்டமன்ற தேர்தல் #mkstalin #assemblyElection

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *