சென்னையில் தொடர் மின்வெட்டு: தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி என நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னையில் மின்வெட்டு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு முழுவதும் நீடித்த மின்வெட்டு குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அம்பத்தூர், பெரம்பூர், அரும்பாக்கம், மாங்காடு மற்றும் மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானதைச் சுட்டிக்காட்டிய அவர், இது முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் நிர்வாகத் தோல்விக்குச் சான்றாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதிகளும் எதார்த்தமும்

தவெக ஆட்சிக்கு வரும்போது அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கோடைக்கால வெப்பத்தில் மக்கள், குறிப்பாகக் குழந்தைகளுடன் நடுத்தெருவில் இறங்கி மின்சாரத்திற்காகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் அணில்களால் மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது, தற்போது மின் உபகரணங்கள் திருடப்படுவதால் மின்வெட்டு ஏற்பதாகக் கூறப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆட்சி மாறினாலும் மக்களின் கவலைகள் தீரவில்லை என்றும், நிர்வாகக் கையாளுதலில் எந்த மாற்றமும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் மீதான விமர்சனம்

திருப்பரக்குன்றம் தீபத்தூணை விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஈடுபட்டுள்ள நிலையில், தனது துறை இருளில் மூழ்கிக் கிடப்பதை அவர் கவனிக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அடிப்படை அரசுப் பதவிகளை வகிக்கக் கூட இவர்களுக்குத் தகுதியில்லை என்று அவர் தனது பதிவில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

#chennaiPowerCut #nainarNagendran #tamilNaduPolitics #electricityDepartment #பொதுமக்கள் #மின்தடை #போராட்டம் #நயினார் நாகேந்திரன் #powerOutage

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *