பக்ரீத் பண்டிகை: இன்று வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

வங்கி விடுமுறை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, கனரா மற்றும் எச்டிஎப்சி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் கிளைகள் இன்று இயங்காது.

தேதி மாற்றத்தால் விடுமுறை அறிவிப்பு

முதலில் சில மாநிலங்களில் மே 27ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிறை அறிவிப்புகளின் அடிப்படையில் பண்டிகை தேதி மே 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை அளித்துள்ளன.

தமிழ்நாட்டிலும் இன்று அனைத்து வங்கி கிளைகளும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் அவசரத் தேவைகளுக்கு அந்தந்த வங்கிகளின் இணையதளங்கள் மற்றும் செயலி வழியிலான சேவைகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.

பங்குச் சந்தைகள் இயங்காது

வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை போலவே, இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையும் இன்று இயங்காது. முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இன்று வர்த்தகம் செய்ய இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

#banking #stockMarket #bakrid #holidays

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *