என்எல்சி பங்கு விற்பனையை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

முதல்வர் விஜய்

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய இந்திய அரசு எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய், பிரதமர் Narendra Modi அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், என்எல்சி நிறுவனத்தின் பங்குகளைக் குறைக்கும் எந்தவொரு முடிவையும் தமிழக அரசு கொள்கை ரீதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். பங்குகளை விற்பனை செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவை இந்திய அரசு மீண்டும் பரிசீலிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஆவணங்களில் சொல்லாடல் மாற்றம்

முந்தைய ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுடன் இருந்த அரசியல் முரண்பாடுகளால், அரசு ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளில் ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. அதே வரிசையில், தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற பிறகும் சில அரசு அறிக்கைகளில் இந்தச் சொல்லாடல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், முதல்வர் விஜய் ‘இந்திய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். நீண்ட காலமாக அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்ட ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடலுக்குப் பதிலாக, முறையான ‘இந்திய அரசு’ என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

என்எல்சி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவில் மாற்றம் தேவை என்று கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

#தமிழக அரசியல் #என்எல்சி #முதல்வர் விஜய் #மத்திய அரசு #முன்பு ஒன்றிய அரசு #தற்போது இந்திய அரசு #தி.மு.க. #வின் தவறான வார்த்தை பயன்பாட்டுக்கு தவெக முற்றுப்புள்ளி #vijay #modi

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *