சென்னையில் திருமுடிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் இன்று மின் தடை

சென்னையில் மின் தடை

சென்னையின் திருமுடிவாக்கம் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் அறிவிப்புப்படி, இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை இருக்கும். மின் இணைப்புகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருமுடிவாக்கம் பகுதியில் மின் தடை ஏற்படும் இடங்கள்

திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு மற்றும் மைக்ரோ எஸ்டேட் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும், பாம் ரிவேரா அபார்ட்மெண்ட், ராயல் கேஸ்டல் அபார்ட்மெண்ட், அமர்ப்ரகாஷ் அபார்ட்மெண்ட் குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்ரடிவ் சொசைட்டி, பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர் மற்றும் டாசியோவா தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மின் தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.நகர் பகுதியில் மின் தடை ஏற்படும் இடங்கள்

தியாகராய நகர் பகுதியில் தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு, இராமசாமி தெரு, தியாகராய சாலை, நீலகண்டா மேத்தா தெரு, வித்யாராமன் சாலை, தீனதயாளன் தெரு, மெலானி சாலை, பாசுதேவ்தெரு மற்றும் வடக்கு போக்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதேபோல் பனகல்பார்க், பின்ஜால் சுப்பிரமணியதெரு, வெங்கடேசன் தெரு, ராஜமன்னார் தெரு, ஜி.என்.செட்டி சாலை, வெங்கட்நாராயணன் சாலை, பகவந்தம் தெரு, ஜெகதீசன் தெரு, சிங்காரவேலு தெரு, ராஜாபாதர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு மற்றும் கோபாலகிருஷ்ணன் தெரு ஆகிய இடங்களிலும் மின் தடை ஏற்படும்.

மேலும் விஜயராகவாச்சாரி தெரு, டாக்டர் நாயர் சாலை, கோபாலகிருஷ்ணன் ஐயர் தெரு, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாசாரி தெரு, பதல்லா சாலை, கிரியப்பா சாலை, லோடிகான் தெரு, மயிலை ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, கிரசன்ட் பார்ட், சுந்தரம் சாலை, ராஜாம்பாள் தெரு, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, அனுமந்தராவ் சாலை, ராமாராவ்தெரு, சீனிவாசா சாலை, ராமச்சந்திரன் சாலை, சாம்பசிவம் சாலை, பர்கிட், தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசன்ட் தெரு மற்றும் இந்தி பிரசார சபா தெரு ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணி வரை மின் மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#chennaiNews #powerCut #tneb #tNagar #thirumudivakkam #சென்னை #மின்சார வாரியம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *