இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா
இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
வெற்றி இலக்கு
தென் ஆப்பிரிக்க அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 4-1 என முடிக்க முனைப்பு காட்டுகிறது. மறுபுறம் இந்திய அணி கடைசி போட்டியிலாவது வெற்றி பெற்று மானத்தை காக்க விரும்புகிறது.

Leave a Reply