13 ஆண்டுகளுக்குப் பின்னும் சச்சினின் தினசரி வருமானம் ரூ.10 கோடி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், 13 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 2013-ல் ஓய்வு பெற்றார். ஆனாலும் அவரது புகழ் இன்னும் மறையாமல் உள்ளது.

சச்சினின் நிகர மதிப்பு

டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர், அத்துடன் அதிக சர்வதேச ரன்கள் மற்றும் அதிக சதம் அடித்தவர் உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், இன்றும் உலகளவில் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக டெண்டுல்கர் தொடர்கிறார். இவருடைய சொத்து மதிப்பு இன்றைய சூழலில் சுமார் ரூ. 1,415 – 1,470 கோடி. ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்களில் இவரே உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தற்போது பிரபல வீரராக இருக்கும் விராட் கோலியை விடவும் ஓய்வுபெற்ற சச்சினின் நிகர மதிப்பு அதிகம்.

வருமானம் மற்றும் பிராண்ட் மதிப்பு

சச்சினின் சொத்து கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக 2020-ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட ரூ.600 கோடி அதிகரித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற சச்சினினுக்கான மவுசு விளம்பர உலகில் சற்றும் குறையவில்லை. பிரபலமான Kroll Celebrity Brand Valuation மற்றும் Outlook Business (ஏப்ரல் 2024 & 2026) அறிக்கைகளின்படி, சச்சின் டெண்டுல்கர் விளம்பரப் படப்பிடிப்புகள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒரு நாளைக்கு ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை கட்டணமாகப் பெறுகிறார். ஒரு ஓய்வு பெற்ற வீரர் ஒருநாள் வருமானமாக இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவது உலக அளவில் மிக அபூர்வம்.

முதலீடுகள் மற்றும் சொத்துக்கள்

தற்போது விளையாடும் முன்னணி இளம் வீரர்கள் கூட இந்த அளவு தொகையை ஒருநாள் ஊதியமாக பெறவில்லை. மிகச்சிறந்த முதலீட்டாளராகவும் சச்சின் மாறியிருக்கிறார். ‘Azad Engineering’ போன்ற நிறுவனங்களில் சச்சின் முதலீடு செய்திருந்தார். இதில் அந்நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்த பிறகு பெரும் லாபத்தைத் தந்தது. இது தவிர EdTech மற்றும் Clean Energy ஆகிய நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். ரியல் எஸ்டேட் முதலீடுகள் வேறு இருக்கிறது. மும்பையின் பாந்த்ரா மேற்கில் சச்சின் வசிக்கும் ‘பெர்ரி கிராஸ் ரோடு’ பங்களாவின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர லண்டன் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களிலும் அவருக்கு விலையுயர்ந்த சொத்துக்கள் உள்ளன. இதுவே ரூ.300 கோடியை தாண்டும் எனச் சொல்லப்படுகிறது.

முடிவு

சுருக்கமாகச் சொன்னால் கிரிக்கெட்டில் மட்டுமல்ல வருமானம் ஈட்டுவதில் மற்ற வீரர்களை விட ஜாம்பவானாக இருக்கிறார் என்று மறுக்கமுடியாத உண்மை.

#சச்சின் டெண்டுல்கர் #கிரிக்கெட் #வருமானம் #விளம்பரம் #சொத்து #இந்தியா #சச்சின் #இந்திய கிரிக்கெட் #சச்சின் வருமானம் #சச்சின் முதலீடு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *