சென்னை: ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் அறிக்கை
இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள் மற்றும் அயராது தேர்தல் பணியாற்றிய அதிமுகவினருக்கும் நன்றி. ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லு முல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்கள், ஏஜென்ட்கள் தங்களுக்கான ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை விழிப்போடு கண்காணிக்க வேண்டும்,” என்று இபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம்; ஓட்டு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை மிகுந்த விழிப்போடு கண்காணித்து முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு தகவல் கொடுத்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிலவரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஓட்டு எண்ணும் பணி இன்று தொடங்கியது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு முன்னணி கட்சிகளும் வெற்றிக்கான முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, இபிஎஸ்ஸின் அறிவுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply